ஹலிமா யாக்கோப்

முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப்புக்கு சிங்கப்பூரின் உயரிய குடிமை விருது வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மத்திய கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இவ்வாண்டிற்கான தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்திடம் இருந்து இவர் ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ விருதைப் பெற்றார்.
சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் ஹலிமா யாக்கோப் ‘ஆர்டர் ஆஃப் தெமாசெக்’ எனும் ஆக உயரிய குடிமை விருதைப் பெறுகிறார்.
சிங்கப்பூரின் அதிபராக பதவி வகித்தபோது அதிபர் ஹலிமா யாக்கோப் சிங்கப்பூரர்களை ஐக்கியப்படுத்த முயன்று இருக்கிறார்.
அதிபர் ஹலிமா யாக்கோப் தமது ஆறாண்டு தவணைக் காலம் முடிவுறும் நாளான புதன்கிழமை (செப்டம்பர் 13) காலை இஸ்தானா ஊழியர்களிடமிருந்து விடைபெற்றார்.
சிங்கப்பூரின் எட்டாவது அதிபராகவும் முதல் பெண் அதிபராகவும் பதவி வகிக்கும் ஹலிமா யாக்கோப் செப்டம்பர் 13ஆம் தேதி பதவி ஓய்வுபெறுகிறார்.